Skip to main content

தொகுப்பு 1 - 'ஆந்த்ரோபோசீன் அல்லது பூமியின் நீண்ட கால வரலாற்றில் மனிதனின் கால்தடம்'

எப்போதும் இல்லாத அளவிற்கு இயற்கை சிதைவுகளுக்கும் மீள முடியாத பரவலான பல்லுயிர் உயிரின வீழ்ச்சிக்கும் நாம் ஒட்டு மொத்த மனித சமுதாயமும் காரணம் என்ற கூற்று வலுத்து வருகின்றது. மனிதர்களாக நாம் இந்த பூமியில் நிகழ்த்தி வரும் மீள முடியாத மாற்றங்கள் எவ்வாறு இயற்கையை பாதித்து வருகின்றது என்பதற்கு வரலாற்றுப் பூர்வமான சான்றுகளும் ஆராய்ச்சிகளும் வலுத்து வருகின்றது.இதே போன்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் புறக்கணிக்கமுடியாத  குரலும் வலுத்துள்ளது.

இதையும் தாண்டி உலக நாடுகளில் அரசியல் பொருளாதாரம், மக்களின் நகர்புறத்தை நோக்கிய இடம் பெயர்தல், போர் மற்றும் வறட்சி வெள்ளங்களால் ஏற்படும் புலம் பெயர்தல் ஆகிய வற்றை சுற்றுச்சூழல் மாற்றங்களுடன் ஒருங்கிணைத்து பார்க்கும் மனப்பாங்கு பெருகிவருகின்றது. இது இயற்கை சூழல் மாற்றத்தை நேரடியாக இந்த பூமியில் ஒட்டு மொத்த மானுட வளிர்ச்சியுடன் ஒப்பிடும்  விளக்கத்தை மேலும் ஆழமான மற்றும் சிக்கலான கேள்விகளுக்கு உள்ளாக்கி வருகின்றது.இந்நிலையில் நம்மை பெரிதும் பாதிக்கும் இந்த மாற்றங்களின் வரலாறு நமது சில கேள்விகளுக்கான விடைகளையும் நமது செயல்களின் விளைவுகளையும் முழுமையாக புரிந்து கொள்ள உதவும்.

(Image Source: Ancient Egyptian Hoe and Plough -Wiki Commons )

இது போன்ற இயற்கையின் அழிவை மனித சமூகத்தின் வளர்ச்சியுடன் நேரடியாக தொடர்பு படுத்தும் போது பயன்படுத்தப்படும் ‘Anthropocene’ எனும் வார்த்தை புரிந்து கொள்வது மிக அவசியம்.

இது உதாரணமாக மனிதன் முதன் முதலில் நெருப்பு, சிறு கருவிகள் மற்றும் உலோகத்தின் பயன்பத்திய காலத்தில் இருந்து தொடங்கியது.பின்னர் ஒருங்கிணைந்து இயங்கும் சமூக பண்புகளை வளர்த்து கொண்ட வரலாற்று காலத்தின் தொடக்கத்தை குறிக்கலாம். ஆனால் அறிவியலாளர்கள் பெரும்பான்மையினர் இச்சொல்லை ஐரோப்பவை மையமாக கொண்டு நிகழ்ந்த தொழில் புரட்சி ஏற்பட்ட காலத்தையே ஆரம்பமாக வைத்து கணக்கிடுகின்றனர்.  அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் பரவிய காலனிய ஆதிக்கத்தின் விளைவான இய்ற்கை வளங்களின் சுரண்டலின் பாதிப்பையே அந்த்ரோபோசீனின் தொடக்கமாக வரையருக்கின்றனர். இது சுற்றுசூழலில் ஒரு சில தொடர் மாற்றங்களையும் பூமியின் தட்ப வெட்ப வேதிய நிலைகளில் சரி செய்ய முடியாத மாற்றத்தின் தொடங்கியது எனலாம்.

அமெரிக்காவில் ஐரோப்பியர்கள் குடி புகுந்து அங்கு இருந்த பூர்வ குடியானவர்களை அழித்து 'புதிய உலகை' தங்களுக்கென்று உருவாக்கிக்கொண்டனர். இதற்கு தூண்டுதலாக் இருந்தது முதலாளித்துவ தத்துவத்தை முழுமையாக கிரகித்து இருந்த பொருளாதார சிந்தனைகளும் அதனை ஆதரித்த அரசாட்சிகளும் நாடுகளுமே.அத்துடன் மத ரீதியாக மனிதனுக்கு இயற்கையின் மீதான இருந்த உரிமையும் இயற்கையை அழித்து பண்படுத்த வேண்டிய மனிதனின் கடமை தொடர்பான நம்பிக்கைகளுமே துணை நின்றது. ஆனால் இப்போது வரலாற்றை மறு பருசீலனை செய்து பார்க்கின்ற புது யுக்திகளால், மனிதனின் போக்கை நிர்ணயம் செய்த மதத்தின் ஆதிக்கம் குறைந்து விட்டது எனலாம். இந்நிலையில் பூமியில் ஆழமாக பொதிந்து விட்ட மனிதனின் கால்தடத்தின் பாதிப்புகளைப் பகுத்தாய்ந்து எஞ்சியுள்ள உயிருள்ள உலகின் ஆயுளை நீட்டிப்பதற்கான பயணம் தொடங்கிவிட்டது.அதன் முதல் படியாக  மனித குலத்தையும்  தாண்டி அனைத்து பல்லுயிர்களையும் இந்த பூலோகத்தின் ஒட்டுமொத்த மாற்றங்களையும் அறிவியல் பூர்வமாக புரிந்து கொள்வதே. பின்னர் அழிவைத் தடுப்பதற்கான சாத்தியங்களை சிந்திக்க வேண்டும்.உலகின் அரசியல் பொருளாதாரம் முதல் நமது தனி மனித வாழ்க்கை முறை மாற்றம் வரையான யுக்திகளைச் செயல்படுத்துவதே இந்த உலகில் மனிதன் அழியாமல் நிலைக்கவும், இந்த பூவுலகம் பட்டுப்போகாமல் இருக்கவும் ஒரே வழி.

இத்தொடரில் இந்த பயணத்தை ஒரு சில ஆராய்ச்சி கட்டுரைகளை உள்ளடக்கிய மகேஸ் ரங்கராஜன் அவர்களின் புதிய வெளிவர உள்ள புத்தகத்தில் (மகேஸ் ரங்கராஜனின் "இயற்கையின் விளிம்பில் - (சுற்றுச்சுழல்) உலகின் தற்போதய நிலையும் நீண்ட கால வரலாறும்" ) இடம் பெற்றுள்ள கட்டுரைகளை வாசித்தும் அதை பற்றிய கருத்துக்களை பகிர்வதுடனும் தொடங்கியுள்ளேன். இது நம்மை உலகின் எல்லா இடங்களுக்கு இட்டுச்செல்வதுடன் ‘மனிதனின் கால்தடம்’ என்பதை விரிவாகவும் முழுமையுமாக தெரிந்துகொள்ளவும் புரிந்து கொள்ளவும் உதவும் என நம்புவோம்.

Comments

Popular post

மணல் மணலாய் நெய்தல் - சின்ன வீராம்பட்டினம் கடற்கரை

புதுச்சேரி – ‘பாண்டி’ என்று பிரபலமாக அழைக்கப்படும் இந்த சிறிய சுற்றுலா நகரத்திற்கு வரும் பலரது எதிர்பார்ப்புகளில் முக்கியமாக இடம்பிடிப்பது மது, பிரஞ்சு கட்டமைப்பான கட்டிடங்கள் மற்றும் கலைகள், கடலோர உல்லாச விடுதிகள் போன்ற மேலும் பல.  இது போன்ற புத்துணர்வு காரணத்திற்காக மட்டுமே அறியப்படும் இந்த ஊரில் வசிப்பதால் வேறு ஒரு கண்ணோட்டத்துடன் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இயற்கையோடு இயைந்த இடங்களை அறியும் ஆர்வத்தோடு தேடுகையில் பாண்டியைச் சுற்றி பல இடங்கள் இயல்பாக சென்று வரக் கூடிய அளவில் உள்ளதை உணர்ந்தேன். அவ்வாறு பார்த்த சில இடங்கள் உசுட்டேரி, கழுவேளி, வேல்ராம்பேட் ஏரி, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, கணபதிசெட்டிகுளம் கடற்கரை, தேங்காய்த்திட்டு அலையாத்தி காடுகள், மற்றும் புதுச்சேரியைச் சுற்றியுள்ள எண்ணற்ற ஏரி, குளங்கள் ஆகியவற்றிற்கு ஒரு பார்வையாளராக மட்டுமல்லாமல் ஒரு ஆர்வலராக, கற்கும் நோக்கத்தோடு (பள்ளிக்கு செல்லும் மாணவரைப் போல்) சென்றேன் . தொடக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இன்றி சில நேரங்களில் தேடியும் சில சந்தர்ப்பங்கள் தானாக அமையவும் இந்த இடங்களுக்குச் சென்றேன். ஆனால் நம்மைச் சுற்றி

இருப்பை இழந்து நிற்கும் இலுப்பை

தேனினை விரும்பி உண்ணும் கரடிகள் , கூட்டம் கூட்டமாக ஒரு மரத்தை நோக்கிச் செல்கின்றன , குட்டி ஈன்ற தாய் கரடி கூட தனது கூட்டத்துடன் அந்த மரத்தை நோக்கிப் பயணப்படுகிறது. மரத்தின் கீழே கொட்டிக்கிடக்கிற பூக்களைத் தின்றுவிட்டு , இன்னும் சுவையான பூக்களை நாடி மரத்தின் மீது ஏறி சுவைமிகுந்த பூக்களை உண்டு கிளைகளில் படுத்துக்கிடக்கின்றன. இந்தக் காட்சி D iscovery Channel – ல் வரும் நிகழ்ச்சி அல்ல , நமது மரபு இலக்கியமான சங்க இலக்கியத்தொகுதியில் ஒன்றான அகநானூற்றில் இலுப்பைப் பூ பற்றி இடம்பெறும் இலக்கிய சாட்சி. சங்க இலக்கியத்தில் இருப்பை என்றழைக்கப்படுகிற இலுப்பை தமிழகத்தின் நிலவெளியில் குறிப்பிடத்தகுந்த ஒரு தாவரமாகும். ஆனால் , இன்று இலுப்பை மரம் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது. கரடிகளைக்கூட கவர்ந்து   இழுத்த இந்த மரம் இன்று கவனிக்கப்படாமல் கேட்பார் அற்று கிடப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக்கட்டுரை. இயற்கையோடு இலுப்பை தமிழர்கள் இயற்கையின் மீது வன்முறையைச் செலுத்தாது இயற்கையோடு இணைந்து இனிமையாக வாழ்ந்த காலப்பகுதியின் இலக்கிய சாட்சியங்கள் சங்க இலக்கியங்

Owl! Owl! Where are you?

“Sir, I told you there are owls in this school campus,” a student exclaimed after having caught sight of this beautiful bird standing idle on one of the branches of a badam tree just outside the school campus. --- Spotted Owlet We were doing a count of all the birds on campus, or what we called the Campus Bird Count , in one of the government schools in Puducherry with primary school students. Initially, there was a discussion amongst the students about the birds they were familiar with and where they had seen them. Students were very enthusiastic and were sharing their encounters, “I have seen many parrots on the tree.” “I have seen peacocks on the farm” “Crows are everywhere” “I have seen pigeons on the electric cable” “I have seen owls in the school” “Owls?”  I was surprised and checked with the teacher. “Though I have not seen it myself, I've heard people say that there are owls here within the campus,” the teacher said. “Don’t worry sir, I will